/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கல்லுாரிகளுக்கிடையே கபடி போட்டி துவக்கம்
/
கல்லுாரிகளுக்கிடையே கபடி போட்டி துவக்கம்
ADDED : அக் 19, 2024 04:50 AM

சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் அரசு கல்லுாரி சார்பில், கல்லுாரிகளுக்கு இடையேயான கபடி போட்டி நேற்று துவங்கியது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வித்துறை விளையாட்டரங்கில், பல்கலைகழக இணைவு கல்லூரிகளுக்கு இடையேயான கபடி விளையாட்டு போட்டிகள் துவங்கியது. இதில் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 18 க்கும் மேற்பட்ட கல்லுாரி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
துவக்க விழாவிற்கு அரசு கல்லூரி முதல்வர் மீனா தலைமை தாங்கினார். இயக்குனர் உடற்கல்வித்துறை முனைவர் சரவணன் வரவேற்றார். அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வித்துறை தலைவர் மற்றும் இயக்குனர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். அண்ணாமலை நகர், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கபடி போட்டியை துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் இணை இயக்குனர் வெங்கடாஜலபதி, துறை தலைவர்கள் சிற்றரசு, நடராஜன், ஒருங்கிணைப்பாளர்கள் ராஜமாணிக்கம், இளவரசி உதவி பேராசிரியர் சேவி உட்பட பலர் பங்கேற்றனர்.
கடலுார் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து 18 கல்லூரிகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று நடைபெறும் போட்டியில் பங்கேற்று விளையாடினர். இன்று 15-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து, பெண்கள் அணியினர் பங்கேற்று விளையாட உள்ளனர்.
தொடர்ந்து 20 ம் தேதி, கபடி ஆண்கள் பிரிவில் மண்டல விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டி ஏற்பாடுகளை காட்டுமன்னார்கோயில் அரசு கல்லுாரி இயக்குநர் உடற்கல்வி துறை சரவணன் செய்திருந்தார்.