/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இரும்பு கம்பிகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை
/
இரும்பு கம்பிகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை
ADDED : பிப் 22, 2026 05:06 AM
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே வீடு கட்ட வைத்திருந்த, இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவரு கின்றனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த தோப்பிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 45; இவர், கரிக்குப்பம் கிராமத்தில் அரசின் கனவு இல்லம் வீடு கட்டுவதற்காக கட்டு மான பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இவரது வீட்டில் வீடு கட்ட வைத்திருந்த 220 கிலோ இரும்பு கம்பிகள், 90 கிலோ இரும்பு ராடு, பிளாஸ்டிக் பைப் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோனது. இதன், மதிப்பு ரூ.30 ஆயிரம்.
இது குறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

