/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுகப்பிரம்ம மகரிஷி அருட்பீடத்தில் ஜெயந்தி விழா
/
சுகப்பிரம்ம மகரிஷி அருட்பீடத்தில் ஜெயந்தி விழா
ADDED : ஜூலை 10, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் அடுத்த திருவந்திபுரம் பில்லாலி தொட்டி கிராமத்தில் சுகப்பிரம்ம மகரிஷி அருட்பீடத்தில் உள்ள சுகப்பிரம்ம மகரிஷியின் ஆனி மாத திருவோண நட்சத்திர ஜெயந்தி விழா வரும் 12ம் தேதி நடக்கிறது.
அன்று காலை 8.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாஜனம், ஸ்தபன பூஜை, மகா சங்கல்பம் நடக்கிறது. 9.30மணிக்கு சுகப்பிரம்ம மகரிஷிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. 11 மணிக்கு மகா தீபாராதனை, அருட்பிரசாதம், அன்ன பிரசாதம் வழங்கப்படுகிறது.