ADDED : பிப் 21, 2024 10:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் முதுநகரில் பள்ளி மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் அடுத்த சான்றோர்பாளையத்தை சேர்ந்த மாணவி, முதுநகர் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவியை, அந்த வாலிபர் பைக்கில் கடத்தி சென்றார்.
இது குறித்து மாணவி தந்தை கொடுத்த புகாரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து வாலிபரை தேடி வருகின்றனர்.