ADDED : ஆக 18, 2025 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார : கடலுார் புதுப்பாளை யத்தில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி உற்சவம் நடந்தது.
கடலுார், புதுப்பாளையத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் கிருஷ்ணர் சன்னதி உள்ளது. இங்கு கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இரவு சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதியுலா நடந்தது. பின், நடந்த உறியடி உற்சவத்தில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உறியடித்தனர்.