
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: திருப்பாதிரிபுலியூர் கண்ணபிரான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜை நடந்தது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் கண்ணபிரான் கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தியையொட்டி சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. ருக்மணி சத்யபாமா சமேத கண்ணபிரான் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது.
சுவாமிக்கு இனிப்பு வகைகள், வெண்ணெய், சீடை உள்ளிட்ட பல வகை பொருள்கள் வைத்து சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.