/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குமராட்சி வாய்க்கால்கள் துார் வார கோரிக்கை
/
குமராட்சி வாய்க்கால்கள் துார் வார கோரிக்கை
ADDED : அக் 23, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: குமராட்சி கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ரூம் வாய்க்கால் மற்றும் வருசபுத்து வாய்க்கால்கள் தூர் வாராததால் அருகில் உள்ள 100 க்கும் மேற்பட்ட குடிசைகளை தண்ணீர் சூழும் அபாயம் உள்ளது.
எனவே உடனடியாக, ரூம் வாய்க்கால் மற்றும் வருசபுத்து வாய்க்கால்களை உடனடியாக தூர்வாரக் கோரி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில், குமராட்சி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அருள்அரசனிடம் மனு அளிக்கப்பட்டது.
அப்போது, மாவட்டச் செயலாளர் பிரகாஷ், கிராம தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.