/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பரிமள ரங்கநாதர் கோவிலில் 10ம் தேதி கும்பாபிேஷகம்
/
பரிமள ரங்கநாதர் கோவிலில் 10ம் தேதி கும்பாபிேஷகம்
ADDED : பிப் 08, 2025 07:02 AM
பெண்ணாடம் : பெண்ணாடம், கருங்குழி தோப்பு பரிமள ரங்கநாத பெருமாள் கோவிலில் வரும் 10ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது.
அதனையொட்டி இன்று 8 ம் தேதி மாலை 5:00 மணிக்கு பகவத் பிராத்தனை, ஆசாரிய வரணம், வேத திவ்ய பிரபந்த பாராயணம், முதல் கால பூஜை நடக்கிறது.
நாளை 9ம் தேதி காலை 9:00 மணிக்கு மகாசாந்தி ஜெபம், இரண்டாம் கால ஹோமம், மாலை 5:00 மணிக்கு பெருமாள் திருவாராதனம், பெருமாள் சயனாதிவாசம், மூன்றாம் கால ஹோமம் நடக்கிறது.
நாளை மறுநாள் 10ம் தேதி விஸ்வரூபம் பெருமாள் திருவாராதனம், நான்காம் கால ஹோமம், மகாபூர்ணாஹூதி, காலை 6:55 மணிக்கு கும்பப் பெருமாள் புறப்பாடு, 7:15 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடக்கிறது.
தொடர்ந்து, 7:45 மணிக்கு திருவாராதனம், வேத திவ்ய பிரபந்த சாற்றுமறை நடக்கிறது. 11ம்தேதி மண்டலாபிஷேகம் துவங்குகிறது.