sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிரளய காலேஸ்வரர் கோவிலில் வரும் 10ம் தேதி கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் துவக்கம்

/

பிரளய காலேஸ்வரர் கோவிலில் வரும் 10ம் தேதி கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் துவக்கம்

பிரளய காலேஸ்வரர் கோவிலில் வரும் 10ம் தேதி கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் துவக்கம்

பிரளய காலேஸ்வரர் கோவிலில் வரும் 10ம் தேதி கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் துவக்கம்


ADDED : பிப் 08, 2025 07:08 AM

Google News

ADDED : பிப் 08, 2025 07:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : பெண்ணாடத்தில் அமைந்துள்ள பழமையான பிரளய காலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று மாலை யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான, ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளய காலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 18 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் 10ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேக விழா கடந்த 3ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று பரிவார தெய்வங்களுக்கு கலாசர்ஷனம், மாலை அங்குரார்ப்பனம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை, ஜபம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. முன்னதாக காலை வெள்ளாற்றில் இருந்து புனித தீர்த்தம் யானை மீது ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை, இரவு 9:00 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.

நாளை காலை 8:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, மாலை 6:00 மணிக்கு 5ம் கால யாகசாலை பூஜை, இரவு 9:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.

10ம் தேதி விடியற்காலை 4:30 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜை, ஹோமம், 6:00 மணியளவில் பரிவார யாக சாலைகள், கடம் புறப்பாடாகி காலை 7:00 மணிக்கு குடக்கரை விநாயகர், தேரடி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

9:00 மணிக்கு பிரதான யாகசாலை நிறைவு, யாத்ரதானத்தை தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 10:30 மணிக்கு ஆமோதனாம்பிகை உடனுறை பிரளய காலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம், இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது.






      Dinamalar
      Follow us