sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குறுவை பயிர் சேதம்: விவசாயிகள் கவலை

/

குறுவை பயிர் சேதம்: விவசாயிகள் கவலை

குறுவை பயிர் சேதம்: விவசாயிகள் கவலை

குறுவை பயிர் சேதம்: விவசாயிகள் கவலை


ADDED : ஜூலை 17, 2025 06:41 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : பெண்ணாடம் பகுதியில் சம்பா நெல் சாகுபடி செய்த வயல்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி, வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த மே மாதத்தில், குறுவை நெல் நடவுப்பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர். தற்போது 2 மாதங்கள் முடிந்த நிலையில் நெற்பயிர்களில் கதிர்கள் விட்டுள்ளன. தற்போது அறுவடை பணிகளும் துவங்கி உள்ளது.

இந்நிலையில், பெண்ணாடம் அடுத்த திருமலை அகரம், நந்திமங்கலம், பெ.பூவனுார், ஓ.கீரனுார், அரியராவி உட்பட பல கிராமங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன. இதனால் மகசூல் பாதிக்கும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வேளாண்மை, வருவாய்த்துறை அதிகாரிகள் சேதமான வயல்களை பார்வையிட்டு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us