ADDED : பிப் 16, 2025 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : குட்கா பதுக்கி வைத்து விற்ற பெட்டிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று காலை 9:00 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது, செம்பேரி சாலை அருகே உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அதில், அனுமதியின்றி பதுக்கி வைத்து விற்ற 10 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் பாண்டியன், 55; என்பவரை போலீசார் கைது செய்தனர்.