ADDED : ஆக 29, 2025 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அருகே விஷம் குடித்து கூலி தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
பண்ருட்டி அடுத்த புதுப்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் திருமாறன்,52; கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 1 ஆண்,1பெண் குழந்தைகள் உள்ளனர்.
மது பழக்கத்திற்கு அடிமையான திருமாறன் கடன் பிரச்னையால் தவித்துவந்தார். நேற்று முன் தினம் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கினார்.
உடன் அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்ந்தவர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை திருமாறன் இறந்தார்.
காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.