/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாமுண்டீஸ்வரி கோவிலில் லட்சார்ச்சனை
/
சாமுண்டீஸ்வரி கோவிலில் லட்சார்ச்சனை
ADDED : ஆக 02, 2025 07:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.
புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை மற்றும் ஆடி மாத 3ம் வெள்ளி விழா கடந்த 30ம் தேதி கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, கலச அபிஷேகம், கோ பூஜை, பால்குட அபிேஷகம் நடந்தது.
நேற்று முன்தினம் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலசந்தி பூஜை, லட்சார்ச்சனை நடந்தது.
நேற்று லட்சார்ச்சனை, சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தேவாங்கர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.

