
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : கீரப்பாளையத்தில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 33ம் ஆண்டு விளக்கு மற்றும் கன்னிபூஜை விழா நடந்தது.
சோமநாதர்கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு விளக்கு பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை 9:30 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், 10.00 மணிக்கு லட்சார்ச்சனையும் 12:00 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.