
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார், குமாரப் பேட்டை வேம்புலி அம்மன் கோவிலில், உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
கடலுார் அடுத்த குமாரப் பேட்டையில் வேம்புலி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, உலக நன்மை வேண்டியும், ஊர் செழிப்பாக இருக்கவும், குடும்பங்கள் தழைத்தோங்க வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். 200க்கும் மேற்பட்ட பெண்கள், திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.