ADDED : மார் 08, 2026 04:53 AM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: ஆவினங்குடி இன்ஸ்பெக்டரை கண்டித்து, விருத்தாசலம் நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி வழக்கறிஞர் செந்தில் சரவணன்கடந்த 5ம் தேதி ஆவினங்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் சம்பந்தமாக சென்றார்.
அப்போது, அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் இளவரசன், அவரைஅசிங்கமாக திட்டினார். இதன் காரணமாக, விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் பணிகளை புறக்கணித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, வழக்கறிஞர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில், வழக்கறிஞர்கள் ஆனந்தகண்ணன், புஷ்பதேவன், சம்பத், சிவசங்கர், ஜெய்பிரகாஷ், இளையராஜா, கணேஷ், அசோக், மாய மணிகண்டன், சிவக்குமார், அப்துல்லா,ராஜா, செந்தில், சண்முகம், உதயா, மோகன் மற்றும் வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.
