
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி:
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், ரெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கற்றல் திறன் ஆய்வு நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் பேபி தலைமை தாங்கினார். மாணவர்களிடம் தமிழ், ஆங்கிலம் படித்தல், எழுதுதல் மற்றும், கணித அடிப்படை செயல்பாடுகளில், 100 சதவீதம் கற்றல் திறன் ஆய்வு நடந்தது.
குறிஞ்சிப்பாடி வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் பிரியதர்ஷினி, இடைநிலை ஆசிரியர் எட்வின் ராஜ், கல்குணம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மரிய லுார்துராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் விண்ணரசி பங்கேற்றனர்.

