ADDED : ஜன 30, 2024 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி, : ராமநத்தம் அருகே சாலை விபத்தில் தனியார் கல்லுாரி பஸ் மோதி, பைக்கில் சென்ற அரசுக் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், நைனார்பாளையம் அடுத்த வி.மாமந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன்,42; திட்டக்குடி அரசு கலைக்கல்லுாரியில், தமிழ்த்துறையில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். நேற்று காலை வீட்டிலிருந்து பைக்கில் கல்லுாரிக்கு சென்றார். 9:10மணிக்கு தொழுதுார் அருகே சென்றபோது, எதிரே வந்த தனியார் கல்லுாரி பஸ் மோதியது. இதில், தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே வேல்முருகன் உயிரிழந்தார்.
புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.