ADDED : பிப் 06, 2026 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி சுற்றுப்பகுதிகளில் தொழுநோய் களப்பணி ஆய்வு நடந்தது
கடலுார் மாவட்டத்தில் தொழுநோய் விழிப்புணர்வு மற்றும், கள ஆய்வில் சுகாதார அமைப்பை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
குள்ளஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ரேவதி மணிபாலன் மற்றும் மருத்துவ குழுவினர், குள்ளஞ்சாவடி கடைவீதி மற்றும், சுற்றுப் பகுதிகளில் கள ஆய்வு குறித்த ஆய்வில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் மத்தியில் தொழுநோய் ஒழிப்பு மற்றும் நோய் பாதிப்பின் ஆரம்ப நிலை, அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வை மருத்துவ குழுவினர் தொடர்ந்து ஏற்படுத்தி வருவதாகவும், அது குறித்த சந்தேகங்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி தெளிவு பெற பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.

