sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

காதலி தற்கொலை வழக்கு பண்ருட்டி வாலிபருக்கு 'ஆயுள்'

/

காதலி தற்கொலை வழக்கு பண்ருட்டி வாலிபருக்கு 'ஆயுள்'

காதலி தற்கொலை வழக்கு பண்ருட்டி வாலிபருக்கு 'ஆயுள்'

காதலி தற்கொலை வழக்கு பண்ருட்டி வாலிபருக்கு 'ஆயுள்'


ADDED : அக் 05, 2024 05:10 AM

Google News

ADDED : அக் 05, 2024 05:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : காதலி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், பண்ருட்டி வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலுார் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

கடலுார், மாவட்டம் பண்ருட்டி திருவதிகையை சேர்ந்தவர் சுப்புராயன் மகன் சந்தோஷ்,23; இவர் பண்ருட்டி பகுதியை சேர்ந்த பிளஸ் 2 படித்த 17 வயது மாணவியை காதலித்தார். கடந்த 23.4.2020 பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவியை, சந்தோஷ் தனியாக பேச வேண்டும் எனக்கூறி, தண்டுப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ததில், மாணவி கர்ப்பமானார்.

இதுகுறித்து சந்தோஷ் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்ட மாணவியை, அவரது குடும்பத்தினர் திட்டி விரட்டினர். அதனைத் தொடர்ந்து மாணவியும், சந்தோசும் தற்கொலை செய்து கொள்வதற்காக பூச்சி மருந்தை குடித்தனர். அதில், மாணவி இறந்தார். சந்தோஷ் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், சந்தோஷை கைது செய்த பண்ருட்டி போலீசார், அவர் மீது கடலுார் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அரசு தரப்பில் ஜோதிரத்தினம் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி ரமேஷ், குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us