sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொழிலாளி கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள் தண்டனை

/

தொழிலாளி கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள் தண்டனை

தொழிலாளி கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள் தண்டனை

தொழிலாளி கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள் தண்டனை


ADDED : பிப் 01, 2024 01:35 AM

Google News

ADDED : பிப் 01, 2024 01:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்:கடலுார் மாவட்டம், பண்ருட்டி வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம், 55. மளிகை மொத்த வியாபாரக் கடையில் வேலை செய்தார்.

கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 16ல் பணம் வசூலிக்க சென்ற போது, வடலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே கொலை செய்யப்பட்டார்.

வடலுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சண்முகத்துடன் வேலை செய்த பண்ருட்டி அவுலியா நகரை சேர்ந்த சதாம் உசேன், 35, என்பவரிடம் விசாரித்தனர்.

சதாம் உசேன் தன் கடன் பிரச்னையை தீர்க்க, நண்பர்களுடன் சேர்ந்து சண்முகத்தை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, அவர் வசூலித்து வைத்திருந்த நான்கு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார்.

சதாம் உசேன், அவரது நண்பர்கள் கல்லுக்குழி வினோத்குமார், 27, ஆண்டிக்குப்பம் அஜித், 28, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கடலுார் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பிரகாஷ், குற்றவாளிகள் சதாம் உசேன், வினோத்குமார், அஜித் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் சதாம் உசேனுக்கு 8,000 ரூபாய், மற்ற இருவருக்கும் தலா 7,000 ரூபாய் அபராதம் விதித்தார்.






      Dinamalar
      Follow us