ADDED : ஜூலை 02, 2026 03:14 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: கடலுார் புள்ளியல்துறை உதவி இயக்குனர் செல்வசேகர் தலைமையிலான குழுவினர், விருத்தாசலம் - தேவங்குடி சாலையில் நேற்று சோதனை செய்த போது, டிப்பர் லாரியில், 3 யூனிட் கூழாங்கற்களை கடத்தி சென்றது தெரிந்தது.
கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, லாரி டிரைவர் பாலக்கொல்லை புதுப்பேட்டை கோவிந்தராசு மகன் சதீஷ், 26; என்பவரை கைது செய்தனர். லாரி உரிமையாளர் ஆறுமுகம் மகன் தினேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
