ADDED : ஜூலை 16, 2026 03:15 AM
அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சிலம்பிநாதன்பேட்டை, நான்கு முனை சந்திப்பு அருகே கடலுார் புள்ளியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் பெர்னார்ட் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக டிப்பர் லாரியில் உரிமம் இன்றி, எம்.சாண்ட் ஏற்றி வந்தது தெரியவந்தது.
அதையடுத்து, கிராவல் ஏற்றி வந்த பண்ருட்டி கீழக்கொல்லையை சேர்ந்த எழிலரசன், 27; என்பவரை பிடித்து, நடுவீரப்பட்டு போலீசில் ஒப்படைத்தார்.
நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.
