ADDED : செப் 24, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் வெள்ளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மச்சநாதன்,42, மினிலாரி டிரைவர். இவர், கடந்த ஒராண்டாக கடன் பிரச்னை மற்றும் உடல்நிலை பாதிப்பாலும் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டுக்கு பின்புறம் மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து மச்சநாதனின் மனைவி சத்தியவாணி கொடுத்த புகாரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

