ADDED : ஏப் 09, 2026 06:21 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: கம்மாபுரம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் புருேஷாத்தமன் மற்றும் போலீசார், விருத்தாசலம் - சேத்தியாதோப்பு சாலையில் நேற்று மாலை ரோந்து சென்றனர்.
அப்போது, கத்தாழை பஸ் நிறுத்தம் அருகே வந்த, டிப்பர் லாரியை நிறுத்தினர். ஆனால், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடினார்.சோதனை செய்தபோது, 3 யூனிட் கூழாங்கற்கள் கடத்திச் சென்றது தெரிந்தது. கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, லாரியை பறிமுதல் செய்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
