ADDED : அக் 12, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார் நேற்று ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புவனகிரி மீன் மார்க்கெட் அருகில் சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்தவரை பிடித்து விசாரித்தனர். அப்போது கீழ்புவனகிரி தென்கரைக்கரைத்தெருவைச் சேர்ந்த குமரவேல்,51; என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு விற்றது தெரிய வந்தது. உடன் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.