ADDED : பிப் 16, 2025 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : பெண்ணாடத்தில் வெளிமாநில லாட்டரி டிக்கெட் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம், அக்ரஹாரதெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 52; இவர், தனது வீட்டில் வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் விற்றது தெரியவந்தது. அதன்பேரில், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, வெளிமாநில லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

