ADDED : அக் 25, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில் ரோந்து சென்றனர்.
சிவன் கோவில் அருகே ஆலிச்சிக்குடி கிராமத்தைச் சேர்ந்த சேகர், 64, என்பவர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, சேகரை கைது செய்தனர். அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.