ADDED : மார் 15, 2026 03:48 AM

காட்டுமன்னார்கோவில்: காஸ் விலை உயர்வை கண்டித்து மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
காட்டுமன்னார்கோவில் மா.கம்யூ., கட்சி சார்பில் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீதான போர் தாக்குதலை நிறுத்தக்கோரியும், இதன் காரணமாக மத்திய அரசு காஸ் மீது உயர்த்தப்பட்ட 60 ரூபாய் விலை உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும், பஸ்நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டச் செயலாளர் தேன்மொழி தலைமை தாங்கினார்.
மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ், கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பொன்னம்பலம், மணிகண்டன், மாதர் சங்க செயலாளர் ஜெயந்தி, மாலதி, புனித வள்ளி, ஷர்மிளா, கவிதா, சுபாஷ், ராஜசேகர், கிளைச் செயலாளர்கள் செல்வராஜ், காளிதாஸ், தேசிங்கு, கொளஞ்சி, அருள், மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

