ADDED : மே 02, 2025 05:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி தாகூர் தெருவில் மதன் ஜுவல்லரி திறப்பு விழா நடந்தது.
கடை உரிமையாளர்கள் மதன்சந்த், குமார்பால், இந்தர் சந்த், ரஞ்சித் ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு விருந்தினர்கள் பண்ருட்டி நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம், எஸ்.வி., ஜுவல்லரி உரிமையாளர் வைரக்கண்ணு, வழக்கறிஞர் இதயத்துல்லா பங்கேற்றனர்.
விழாவில், ஜூவல்லரி உரிமையாளர்கள், அடகு கடை வியாபாரிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.