sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பராமரிப்பின்றி மழைநீர் சேமிப்பு குளம்

/

 பராமரிப்பின்றி மழைநீர் சேமிப்பு குளம்

 பராமரிப்பின்றி மழைநீர் சேமிப்பு குளம்

 பராமரிப்பின்றி மழைநீர் சேமிப்பு குளம்


ADDED : டிச 30, 2025 05:20 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் மழைநீர் சேமிப்பு குளம் கழிவுநீர் சேமிப்பு குளமாக மாறிய அவலம் ஏற்பட்டுள்ளது.

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் ஒரு ஏக்கர் பரப்பில் உள்ள வரட்டு குளம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் பாழாகியது.

அதனைத் தொடர்ந்து, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஒரு ஆண்டிற்கு முன் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து குளம் துார்வாரப்பட்டது.குளத்தின் நான்கு புறமும் கருங்கல் சுவர் அமைக்கப்பட்டது.

ஆனால், குளத்திற்கு தண்ணீர் வர வழி ஏற்படுத்தவில்லை. அதிகாரிகள் அலட்சியத்தால் நகர் பகுதிகளின் கழிவுநீரை, பல லட்சம் செலவு செய்து அழகுபடுத்திய குளத்தில் விட்டனர்.

இதனால் குளத்தில் கழிவுநீர் தேங்கியது. பராமரிப்பு இல்லாததால் குளம் முழுவதும் புதர் மண்டி காணப்படுகிறது.

குளத்தின் மேல் கரையில் டைல்ஸ் கற்கள் புதைத்து நடைபயிற்சிக்கான நடைபாதை அமைத்தனர்.

மக்களும் சில நாட்கள் நடைபயிற்சி சென்றனர். கழிவுநீர் தேங்கியதாலும், புதர்மண்டி காணப்படுவதாலும் மக்கள் நடைபயிற்சி செல்லவில்லை. குளத்தை பராமரிக்காததால் மக்கள் வரிப்பணம் பாழாகிறது. இனியாவது குளத்தை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us