/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மக்காச்சோளம் முளைப்பு; விவசாயிகள் வேதனை
/
மக்காச்சோளம் முளைப்பு; விவசாயிகள் வேதனை
ADDED : ஜன 27, 2026 03:41 AM

சிறுபாக்கம்: சிறுபாக்கத்தில் மழையால் மக்காச்சோளம் முளைப்பு ஏற்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சிறுபாக்கம் கிராமத்தில் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், வரகு, பருத்தி உள்ளிட்டவை சாகுபடி செய்வது வழக்கம். நடப்பாண்டில் மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகள், கடந்த சில நாட்களாக அறுவடை செய்து வருகின்றனர். அறுவடை செய்த மக்காச்சோளத்தை பாட்டைகுளம் அருகேயுள்ள வேளாண் களத்தில் உலர்த்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக சிறுபாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் மழை பெய்தது. இதனால், வேளாண் களத்தில் ஏற்பட்ட ஈரப்பதத்தில், உலர்த்த வைக்கப்பட்ட மக்காச்சோளம் பயிர் முளைப்பு விட்டது. இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
விவசாயிகள் கூறுகையில்; கடந்த 5 மாதங்களுக்கு முன் உழவு செய்து, விதைப்பு, உரமிடுதல், களை உள்ளிட்டவைக்கு செலவு செய்து, அதிக மகசூல் கிடைக்கும் என எதிர்பார்த்தோம்.
மழையால் ஏற்பட்ட ஈரப்பதத்தில் அறுவடை செய்த மக்காச்சோளம் முளைப்பு ஏற்பட்டது வேதனை அளிக்கிறது என கூறினர்.

