ADDED : ஜன 20, 2025 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடியில் சென்னை மார்க்கமாக செல்லும் ரயில் தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, விருத்தாசலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே இருப்புபாதை போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. காவி நிற வேஷ்டி அணிந்திருந்தார். மேலும், சென்னை மார்க்கமாக சென்ற ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு சடலத்தை அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து, விருத்தாசலம் இருப்பு பாதை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

