தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தொழிலாளி மீது தாக்குதல் ஒருவர் கைது: 2 பேருக்கு வலை

தொழிலாளி மீது தாக்குதல் ஒருவர் கைது: 2 பேருக்கு வலை

தொழிலாளி மீது தாக்குதல் ஒருவர் கைது: 2 பேருக்கு வலை


ADDED : அக் 19, 2024 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2024 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி : பண்ருட்டி அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த அழகப்பசமுத்திரம் அந்தோணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ்,46; அதே பகுதியை சேர்ந்தவர்கள் நிர்மல்ராஜ். அந்தோணிகுமார், ஜெபஸ்டின் இவர்கள் 4 பேரும் அங்குள்ள ஹாலோ பிளாக் தயாரிக்கும் கூடத்தில் வேலை செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை செய்வதில் மோகன்ராஜிக்கும் மற்ற 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் சம்பவத்தன்று சத்திரம் ரோடு மாந்தோப்பு அருகில் நின்று கொண்டிருந்த மோகன்ராஜை நிர்மல்ராஜ், அந்தோணிகுமார், ஜெபஸ்டின் ஆகியோர் சேர்ந்து தாக்கி,கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து ஜெபஸ்டின்,37; கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us