ADDED : மார் 04, 2026 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்: ரேஷன் கடை ஊழியரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
வடலுார், சேராக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேலு, 54; இவர் அதே பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த செல்வம் தரப்பினர் கூடுதலாக ரேஷன் பொருட்கள் கேட்டு, ஆனந்தவேலு தர மறுத்ததால் முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆனந்தவேலு வெளியே சென்ற போது அவரை வழிமறித்து, செல்வம் தரப்பினர் தாக்கினர். இதனை தட்டி கேட்ட ஆனந்தவேலு உறவினர்களின் பைக்குகளை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து வடலுார் போலீசில் ஆனந்தவேலு புகார் அளித்தார். தாக்குதலில் ஈடுபட்ட செல்வம், 40; கைது செய்யப்பட்டார். மேலும், அவர் தரப்பை சேர்ந்த ரணதேவன், 46, குருதேவன், 42, ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

