ADDED : அக் 19, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே அரசு அனுமதியின்றி வெடி பொருட்கள் பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சேர்க்காம்பாளையம்,மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன்,54; இவருடைய வீட்டில் அரசு அனுமதியின்றி விற்பனை செய்ய வெடி பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நடுவீரப்பட்டு போலீசார் பிரபாகரனை கைது செய்து,வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.