ADDED : ஜூலை 12, 2025 03:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சத்திரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 27 வயது பெண். இவரிடம் ஆண்டார்முள்ளிப்பள்ளம் முகுந்தன், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இந்நிலையில், அந்த பெண், வேலை செய்யும் கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்ற முகுந்தன் நேற்று மீண்டும் திருமணம் செய்ய வற்புறுத்தி மானபங்கம் செய்து கொலை மிரட்டல் விடுத்தார்.
புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து முகுந்தனை கைது செய்தனர்.

