ADDED : பிப் 21, 2026 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: பொது இடத்தில் ஆபாசமாக பேசியவரை போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, திட்டக்குடி, அண்ணாநகரைச் சேர்ந்த முத்து, 40; என்பவர் திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொது மக்களை பார்த்து ஆபாசமாக பேசி, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நின்று கொண்டிருந்தார்.
அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

