ADDED : செப் 02, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
சிதம்பரம், செப்.3 -
நகைக்கடை உரிமையாளர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரம் சின்ன செட்டி தெருவை சேர்ந்த ஏகாம்பரம் மகன் கண்ணன்,49; காசு கடை தெருவில் நகை கடை நடத்தி வருகிறார்.
இவர் நேற்ற முன்தினம் மதியம் 12 மணிக்கு வீட்டு மாடியில் நடந்து கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்தார். அதில் படுகாயமடைந்தவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் அன்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
