/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் சாவு
/
மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் சாவு
ADDED : ஏப் 09, 2025 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : மாமரத்திலிருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கடலுார், முதுநகர், மோகன்சிங் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன்,41. மீன்பிடி தொழில் செய்த வந்தார். கடந்த 28ம் தேதி, வீட்டின் அருகிலுள்ள மாமரம் ஒன்றில் மாங்காய் பறிப்பதற்காக ஏறினார். எதிர்பாராத விதமாக தவறி விழுந்தவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு கடந்த 7ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.