ADDED : நவ 27, 2024 08:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : மதுபோதையில் தடுமாறி கீழே விழுந்த நபர் உயிரிழந்தார்.
மங்கலம்பேட்டை அடுத்த எடச்சித்துாரை சேர்ந்தவர் துரைசாமி, 54. விவசாயி. நேற்று முன்தினம் மதுபோதையில் வீட்டில் தகராறு செய்து, தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது, அங்கிருந்த கிரைண்டரில் தடுமாறி விழுந்த துரைசாமிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
அவரது மகன் ராஜா புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

