/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனக்குப்பம் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
/
மனக்குப்பம் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
ADDED : டிச 25, 2024 08:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : சாலை வசதி மற்றும் சுகாதார சீர்கேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கடலுார் அடுத்த மனக்குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனு;
மனக்குப்பம் மகாலட்சுமி நகரில் வடிகால் வசதியும், சாலை வசதியும் இல்லாமல் வசித்து வந்தோம். பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்ததால், 5 சாலைகள் இருக்கும்பட்சத்தில் மூன்று சாலைகளில் மட்டும் ஜல்லி, செம்மண் கொட்டினர். வடிகால் அமைத்து சாலை அமைக்க வேண்டும். வடிகால் தண்ணீர், குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், தொற்றுநோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

