ADDED : ஜன 04, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விருத்தாசலத்தில் மாணிக்கவாசகர் உற்சவர் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.
நம்பி ஆரூரான் திருமுறை ஆசிரியர் அறக்கட்டளை சார்பில் 17வது ஆண்டு திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சி கடந்த மாதம் 24ம் தேதி துவங்கியது.
தினசரி மாணிக்கவாசகர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை செய்து, விருத்தகிரீஸ்வரர் கோவில் நான்குமாட வீதிகள் வழியாக திருவீதியுலா நடந்து வருகிறது. நேற்று காலை சுவாமி வீதியுலாவின்போது ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
சிவனடியார்கள், பக்தர்கள் திருவெம்பாவை பாடலை பாடியபடி ஊர்வலமாக வந்தனர்.

