நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: வடலுாரில் குடியரசு தின மாரத்தான் போட்டி நடந்தது.
குடியரசு தின விழாவையொட்டி, போதையில்லா சமுதாயம் உருவாக்குவோம், மரம் வளர்ப்போம் மனித வளம் காப்போம் என்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. வடலுாரில் துவங்கிய இப்போட்டியில், 20க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டி துாரமான குள்ளஞ்சாவடி வரை வந்த வீரர்களுக்கு, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி உள்ளிட்டோர் பரிசு வழங்கி பாராட்டினர்.

