/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சட்டசபை தேர்தலில் தி.மு.க.,விற்கே ஆதரவு ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டம்
/
சட்டசபை தேர்தலில் தி.மு.க.,விற்கே ஆதரவு ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டம்
சட்டசபை தேர்தலில் தி.மு.க.,விற்கே ஆதரவு ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டம்
சட்டசபை தேர்தலில் தி.மு.க.,விற்கே ஆதரவு ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டம்
ADDED : ஆக 16, 2025 03:27 AM
நெய்வேலி: வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., விற்கே ஆதரவு அளிப்போம் என, ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.
கடலுார் மாவட்டம், நெய்வேலியில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் ம.தி.மு.க., என்ற கட்சியே இல்லை என சிலர் பேசுகின்றனர். தமிழகத்தின் நலனுக்காக நான் போராடிதை தமிழக மக்கள் அறிவர்.
கடந்த 2002ம் ஆண்டு என்.எல்.சி., பங்குகளை தனியார் நிறுவனத்திற்கு விற்க போவதாக அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அறிவித்தபோது, அதனை தனியாருக்கு விற்கக் கூடாது என பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன்.
அதனை ஏற்றுக்கொண்ட வாஜ்பாய், பங்கு விற்பனை முடிவை கைவிட்டார். மேகதாது அணை கட்டினால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விவசாயம் பாதிக்கும் என தெ ரி வித்து 6 மாவட்ட விவசாயிகளுடன் போராட்டம் செய்தேன். தமிழ்நாட்டுக்கு மீத்தேன் திட்டம் கொண்டு வருவதற்கு முயன்றனர். மக்களிடம் ஒன்றிணைந்து பல உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தினோம்.
அந்த திட்டமும் நிறுத்தப்பட்டது. 30 ஆண்டுகள் தி.மு.க., விலும் 31 ஆண்டுகள் ம.தி.மு.க.,விலும் என, 61 ஆண்டு வாழ்க்கை அரசியல் வாழ்க்கையாக பயணித்து வருகிறோம்.
மத்திய அமைச்சராக வாய்ப்புகள் வந்த போது அதனை ஏற்கவில்லை. அப்படிப்பட்ட என்னை சுயநலவாதி என்றும். பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் இணைய போவதாகவும் கூறுகின்றனர். வரும் 2026 சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க., ஆதரவு இல்லாமல் தி.மு.க., வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். இருந்த போதும் ம.தி.மு.க., தொடர்ந்து தி.மு.க.,விற்கே ஆதரவளிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.