/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் உயர்த்த நடவடிக்கை! மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அதிரடி
/
அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் உயர்த்த நடவடிக்கை! மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அதிரடி
அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் உயர்த்த நடவடிக்கை! மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அதிரடி
அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் உயர்த்த நடவடிக்கை! மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அதிரடி
ADDED : நவ 12, 2024 08:12 PM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த முதன்மைக் கல்வி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய கடலுார் மாவட்டம் கடலுார், விருத்தாசலம் என 2 கல்வி மாவட்டங்களை உள்ளடக்கியது. கடலுார் மாவட்டத்தில் 246 அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த முதன்மைக் கல்வி அலுவலகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, காலை, மாலை வேளைகளில் பாட வாரியாக சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது.
இந்நிலையி்ல், கடந்த மாதம் நடந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு காலாண்டு தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்பேரில், கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், 246 பள்ளிகளில் கடலுார், பண்ருட்டி, பி.முட்லுார், மஞ்சக்கொல்லை, ஸ்ரீநெடுஞ்சேரி, பூலாமேடு, திருத்துறையூர், திட்டக்குடி உட்பட 30 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் தேர்ச்சி சதவீதத்தில் கடைசி 30 இடங்களை பிடித்தது தெரிந்தது.
இதில், பாட வாரியாக மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண், தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், தேர்ச்சி சதவீதம் குறைந்த 25,000 மாணவ, மாணவிகளை கண்டறிந்து தனிக்கவனம் செலுத்தி சிறப்பு கையேடு வழங்கப்பட்டு பயிற்சி வகுப்பு கடந்த 2 வாரங்களாக நடந்து வருகிறது.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,' 2024-25ம் கல்வியாண்டில் கடலுார் மாவட்டத்தில் அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காலாண்டு தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளின் விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இப்பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் உயர்த்த பாட வாரியாக ஆசிரியர்களுக்கு விரைவில் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மற்ற அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற காரணமாக இருந்த ஆசிரயர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலமாக 75 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது' என்றார்.