/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு மருத்துவ முகாம்
/
வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு மருத்துவ முகாம்
ADDED : டிச 08, 2024 05:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் பகுதியில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு த.வெ.க., சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் 18 வார்டுகளில் பெண்ணையாற்றின் தண்ணீர் புகுந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தினர். முகாமில் பிவெல் மருத்துவமனை, அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர்கள் 250 பேருக்கு பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்.
முகாமில் த.வெ.க., நிர்வாகிகள் சதீஷ்குமார், உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.