sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மருத்துவ மாணவி துாக்கிட்டு தற்கொலை

/

மருத்துவ மாணவி துாக்கிட்டு தற்கொலை

மருத்துவ மாணவி துாக்கிட்டு தற்கொலை

மருத்துவ மாணவி துாக்கிட்டு தற்கொலை


ADDED : நவ 27, 2024 07:29 AM

Google News

ADDED : நவ 27, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம், : சிதம்பரத்தில் மருத்துவ மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், திருப்பதி நகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் மகள் ரக்க்ஷனா, 28; கோயம்புத்துாரில் பல் மருத்துவம் (பி.டி.எஸ்.,) படித்து முடித்து, சிதம்பரம், அரசு மருத்துவ கல்லுாரியில், எம்.டி.எஸ்., படிப்பில் சேர்ந்து படித்து வருகிறார்.

இந்த மாணவி, முத்தையா நகரில் சக மாணவிகளுடன், வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, கல்லுாரிக்கு சென்று வந்தார். தற்போது தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ள சிதம்பரம் வந்து, தனது அறையில் தங்கியிருந்தார்.

ரக்க்ஷனா அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்றும் திடீர் வயிற்று வலியால் அவதியடைந்த அவர், தனது தாயுடன் பேசியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, உடனிருந்த தோழிகள் வெளியில் சென்ற நேரத்தில், புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த மாணவியின் தந்தை ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில், அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us