/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போதை ஆசாமிகள் அச்சுறுத்தல்; மருத்துவமனை ஊழியர்கள் புகார்
/
போதை ஆசாமிகள் அச்சுறுத்தல்; மருத்துவமனை ஊழியர்கள் புகார்
போதை ஆசாமிகள் அச்சுறுத்தல்; மருத்துவமனை ஊழியர்கள் புகார்
போதை ஆசாமிகள் அச்சுறுத்தல்; மருத்துவமனை ஊழியர்கள் புகார்
ADDED : செப் 25, 2024 11:03 PM

விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் போதை ஆசாமிகளின் அச்சுறுத்தலை தடுக்கக் கோரி, மருத்துவ ஊழியர்கள் போராட்டம் நடத்த திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு பிரசவத்திற்கு பின் கவனிப்பு பிரிவில், தாயுடன் இருந்த பெண்ணின் உறவினர்கள் புறநோயாளிகள் பிரிவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சுமீட் நிறுவன பெண் பணியாளர், வார்டுக்கு செல்லுமாறு கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர், சுமீட் பெண் பணியாளரை மிரட்டியுள்ளார். சக மருத்துவ ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பியுள்ளார்.
இரவு நேரங்களில் பெண் நோயாளிகள் மற்றும் பெண் மருத்துவர்கள், ஊழியர்கள் மட்டுமே உள்ள மகப்பேறு பிரிவில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதை தடுக்கும் வகையில், மருத்துவர்கள், பணியாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. முதன்மை குடிமையியல் மருத்துவ அலுவலர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.
அதில், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். மிரட்டலில் ஈடுபட்ட நபர் மீது மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோரிக்கையை வலியுறுத்தி பகல் 1:30 மணியளவில் போராட்டம் நடத்த மருத்துவ ஊழியர்கள் திரண்டனர். விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையேற்று, மருத்துவமனை சார்பில் புகார் மனு கொடுத்துவிட்டு, அனைவரும் வழக்கமான பணிக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.