/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனநலம் பாதித்தவர் ரயிலில் சிக்கி பலி
/
மனநலம் பாதித்தவர் ரயிலில் சிக்கி பலி
ADDED : ஜூலை 22, 2025 08:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே ரயில் பாதையை கடக்க முயன்றவர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி உயிரிழந்தார்.
பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை, 50; மனநலம் பாதித்தவர். இவர் நேற்று மாலை 5:00 மணிக்கு நந்திமங்கலம் ரயில்வே கேட் அருகே உள்ள ரயில் பாதையை கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து மதுரை மார்க்கமாக சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்து வந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் உடலை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.